×

பந்தலூர் அருகே வாழை தோட்டத்தை சூறையாடிய காட்டு யானை

பந்தலூர்: பந்தலூர் அருகே அத்திக்குன்னு கேகே நகர் பகுதியில் வாழைத்தோட்டத்தை காட்டு யானை சூறையாடியது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அத்திக்குன்னு கேகே நகர் குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு, ஒற்றை காட்டு யானை புகுந்து மூர்த்தி என்பவரது வாழைத்தோட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்து வந்த வாழை மரங்களை உடைத்து தின்று சேதம் செய்தது. இதையறிந்த விவசாயிகள் தகரங்களை தட்டியும், சத்தமிட்டும் யானையை விரட்டினர். யானை அங்கிருந்து நகர்ந்து செல்லாமல் நீண்ட நேரம் வாழைத்தோட்டத்தில் முகாமிட்டது. பின்னர், நேற்று அதிகாலை அங்கிருந்து சென்றது. சம்பவம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தேவாலா வனச்சரக ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர். விவசாய பயிர்களை சேதம் செய்த காட்டு யானையை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், யானை சேதம் செய்த விவசாய பயிர்களுக்கு வனத்துறையினர் நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயி கோரிக்கை விடுத்தார்.

The post பந்தலூர் அருகே வாழை தோட்டத்தை சூறையாடிய காட்டு யானை appeared first on Dinakaran.

Tags : Bandalur ,Atikkunnu Ke Nagar ,Nilgiri District ,Dinakaran ,
× RELATED பந்தலூர் பஜாரில் கழிவுநீர் கால்வாய் அமைத்தும் பயனில்லை